Monday, March 8, 2010

மீளா பிரிவு

துண்டிக்கப்பட்ட நினைவுகளை
கனவுகளில் துரத்திக்கொண்டிருந்தேன்
பெயர் இல்லா ஞாபகங்களில்
உனதானவற்றை மட்டும் காணவில்லை
களையும் காட்சிகளில் உனை தேடி அலைந்தேன்
நீ மட்டும் எப்பொழுதும் போல் இப்பொழுதும்
முகம் காட்டி மறைகிறாய்
எதோ ஒன்று உறுத்த
கொடுங்கனவில் இருந்து விழித்தெழுந்தேன்
படுக்கையின் ஒரு மூலையில் முள்ளாய் துருத்திக்கொண்டிருன்டது
நீ பேச மறந்த வார்த்தைகள்

No comments: